இயம,
நியம,
ஆசன,
பிராணாயாம,
பிரத்தியாகார,
தாரண,
தியான,
சமாதி
எனப்படும் 8 படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும். நன்றாக செப்பனிடப்பட்ட ராஜ பாட்டை போல நிச்சயமான வெற்றியைத் தர வழிகளை உடையதாக இருப்பதால் 'ராஜயோகம்' என்றும் இதற்குப் பெயருண்டு.
இதை பஹிர்முகம், அந்தர்முகம் என இரண்டாகப் பிரித்து சொல்லுவர். பஹிர்முகமாவது வெளி நோக்கிய உடலாலியற்றப்படும் ஆசனம், பிராணாயாமம், இயமம், நியமம் முதலியன. சிலர் இதில் பிரத்யாஹாரத்தையும் சேர்ப்பர்.
அந்தர்முகமாவது, பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதியாகும்; இவை மனத்தால் இயற்றப்படுபவையாகும்.
பஹிர்முகமான யோகப் படிகளை மட்டும் ஹடயோகம், கிரியாயோகம் என்றும் சொல்லுவதுண்டு.
கிரியா யோகாவில், முத்திரைகள், பந்தங்களுடன் குண்டலினிச் சக்தியைக் கிளப்பி 'வர்ண மாலாக்கள்' எனப்படும் அட்சர ஜபத்தால் செய்யப்படுவதை 'குண்டலினி யோகம்' என்பார்கள்.
தந்திர யோகம் எனப்படுவதிலும் முக்கியமாக ஆசனம், பிராணாயமம், யோக ஆதாரங்கள் முதலியவைகளை பிற சடங்குகளுடன் வைத்துக் கொண்டுள்ளனர்.
கரும யோகமானாலும், பக்தி யோகமானாலும், ஞான யோகமானாலும், ராஜ யோகம் எனப்படும் இந்த அஷ்டாங்க யோகத்தில் கூறப்பட்டுள்ளவை வேறு வேறு விதமாய் உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதால் இதன் சிறப்பு விளங்கும்.
மேலும் சாங்கிய மதத்தில் இறுதி நிலையை அடைய கூறப்பட்ட வழிகளும் யோக வழியும் ஒன்றே! ஆனால், 'தத்துவம்' என்று நோக்கும் போது சாங்கியத்தையே யோகம் எதிர்பார்த்து நிற்கிறது. வேதாந்த மதங்களும் கூடத்தான்.
சுருக்கமாக கூறவேண்டுமானால், சாங்கியமும், யோகமும் ஒன்றே; யோகத்தில் "புருஷ விசேஷஹா" என்று ஈஸ்வரன் கூறப்படாமலிருந்தால்!
Nanri: kolumandapam.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக